
கோப்பாய் பகுதியில் கோடாவுடன் ஒருவர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் 210 லீட்டர் கோடாவுடன் 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் குறித்த சந்தேக நபரை கோடாவுடன் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடமான மேலதிக விசாரணையின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
-யாழ். நிருபர் ரமணன்-
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025