யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற கார் தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.