கதறி கதறி அழுத ஜூலி... வெளிவந்த உண்மை முகம்! காட்டுத் தீயாய் பரவும் அடுத்த குறும்படம்

கதறி கதறி அழுத ஜூலி... வெளிவந்த உண்மை முகம்! காட்டுத் தீயாய் பரவும் அடுத்த குறும்படம்

கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நபராகவும், மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தவர் ஆகவும் ஜூலி இருந்தார்.

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போயிருந்தார். ஆனால், ஜூலி தான் எடுத்த பெயர் மொத்தத்தையும் டேமேஜ் ஆகி விட்டு தான் வெளியே வந்தார் என்றே சொல்லலாம்.

இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இது குறித்து அவர் நேற்றைய நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

அதில் ஜூலி இடம் முதல் சீசனில் நடந்த விஷயத்தைக் குறித்து கேட்டு வந்தார்கள். அதற்கு ஜூலி கூறியது, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல விமர்சனங்கள், பலரும் திட்டி தீர்த்த சமயம்.

அப்போது ஒரு சேவை மையத்தில் இருந்து ஒருவர் வந்து ஒரு குழந்தைக்கு ஆபரேஷன் செய்யணும் என்று உதவி கேட்டு இருந்தார்கள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அப்ப சோசியல் மீடியா முழுவதுமே என்னை பற்றி தான் தீட்டி கொண்டு இருந்தார்கள்.

இருந்தாலும் ஒரு ஒரு ரூபாய் வாங்கினாலும் குழந்தையின் உயிரை காப்பாற்றி விடலாம் என்று நினைத்துபோராடினேன். அதோடு என்னை திட்டியதற்கும கவலை இல்லை.

தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று போராடி ஒரு வாரத்திற்குள் அந்த குழந்தைக்காக 23 லட்ச ரூபாய் ரெடி பண்ணி மருத்துவ செலவிற்கு கொடுத்தேன்.  

தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளார். அந்த குழந்தையின் பெயர் குகன்.இப்ப என்னை எங்க பார்த்தாலும் அம்மா என்று தான் கூப்பிடுவார் என்று கண்ணீர் மல்க உணர்ச்சி வசமாக ஜூலி பேசி இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பலரும் பாராட்டி வரும் நிலையில் சீசன் 4 போட்டியாளரான சனம் ‘தன்னுடைய கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து எதிர்மறையான விஷயங்களை எண்ணி பழிபோட்டு விளையாடாமல் அதிலும் கருணையும் முதிர்ச்சியையும் காட்டி சிறப்பாக கையாண்டு இருக்கார் ஜூலி என்று பாராட்டி இருக்கிறார்.