பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்

பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மக்கள் எதிர்பார்த்தபடியே ராஜூ வெற்றிப்பெற்றார். இதனிடையே மேடையில் அப்போது பேசிய கமல், பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடியில் 24 மணிநேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என கூறியிருந்தார்.

இதற்கான ப்ரோமோ கடந்த திங்கள் கிழமை வெளியானது. ப்ரோமோவில் அசத்தலாக இருந்தது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்றும் வார இறுதி நாட்களில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் 4 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. அதன்படி வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோரின் பெயர்கள் அடி பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது புதிய தகவலாக அதில் இருந்து 3 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதியான நிலையில், தற்போது அபிநய் மற்றும் சுருதி உள்ளே வருவது உறுதியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்கம் வரும் 30ம் திகதி மாலை 6.30 மணிக்கு டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.