பூநகரியில் இளைஞர் கொலை: நான்கு சந்தேக நபர்கள் கைது

பூநகரியில் இளைஞர் கொலை: நான்கு சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பிற்கு கடந்த 26ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்த இளைஞருக்கும் அதே பகுதிக்கு படகின் மூலம் வந்த குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த இளைஞர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் பூநகரி காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் நேற்று மாலை நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கைதான சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.