வெறும் மருதாணியில் மேலாடை அணிந்தபடி... சர்ச்சையை கிளப்பிய இளம்பெண்ணின் ஆடை

வெறும் மருதாணியில் மேலாடை அணிந்தபடி... சர்ச்சையை கிளப்பிய இளம்பெண்ணின் ஆடை

பெண்களுக்கு அழகு என்றாலே புடவை தான், அது தான் நம் பராம்பரியம் கலாச்சாரமும் கூட என்று கூறும் பலரை பார்த்திருப்போம்.

சேலை அணிந்து, பூச்சூடி வந்தால் தான் பெண்களின் அழகு கூடும் என வர்ணிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் தற்போது அதிலும் நவநாகரீகம் என்று சொல்லக்கூடிய வகையில், விதவிதமாக சேலைகளை கட்டி மகிழ்கின்றனர்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது இளம்பெண்ணின் ஆடை.

அழகான வெள்ளை நிற சேலையில் அந்த பெண் ஜொலிஜொலிக்க, நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

காரணம் அவர் மேலாடைக்கு பதிலாக மருதாணியால் வரைந்துள்ளார், பார்ப்பதற்கு நிஜமான மேலாடை போன்று தெரிந்தாலும் அது மருதாணியால் வரையப்பட்ட ஓவியம் ஆகும்.

இதைப்பார்த்த பலரும், லைக்ஸ்களை குவித்தாலும் பலரும் கடுமையான எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.