காரைநகர் – ஊர்காவற்றுறை படகுப்பாதையூடாக அச்சத்தின் மத்தியில் பயணிக்கும் மக்கள்!

காரைநகர் – ஊர்காவற்றுறை படகுப்பாதையூடாக அச்சத்தின் மத்தியில் பயணிக்கும் மக்கள்!

யாழ்.காரைநகரில் இருந்து ஊர்காவற்றுறைக்கு படகுப் பாதையின் ஊடாக பயணிக்கும் மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே பயணித்தை முன்னெடுத்து வருகின்றதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 600 மீற்றர் நீளம் கொண்டதான குறித்த படகுப் பாதை பயணம் மிகவும் அச்சுறுத்தல் மிக்கதாக இருப்பதாகவும் அதில் பயணம் செய்யும் போது திகிலான மனநிலையுடனேயே பயணம் செய்வதாக இதில் பயணம் செய்வோர் கூறுகின்றனர். குறிப்பாக தண்ணீரில் நடந்தே படகுப் பாதையில் ஏற வேண்டியுள்ளது.

மேலும் இந்த படகுப் பாதையினைப் பயன்படுத்தும் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், நீதிமன்றுக்கு வரும் மக்கள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் படகுப் பாதைக்கு நிதி ஒதுக்குவதாக கடந்த அரசாங்கத்தினால் 2015 ஆம் ஆண்டிலும் தற்போதைய அரசாங்கத்தினால் (2021) இலும் கூறப்பட்டது.

இருப்பினும், கேபிள் மூலமாக இயக்கப்படும் இந்த படகுப் பாதையை மாற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு (2020) ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் 500 மீற்றர் நீளமான பாலம் அமைப்பதற்கு சுமார் 1,700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.