யாழ்.வட்டுக்கோட்டையில் குடும்ப பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்ற திருடர்கள்

யாழ்.வட்டுக்கோட்டையில் குடும்ப பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்ற திருடர்கள்

யாழில் கோவிலுக்கு சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்றிருக்கின்றனர். இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (16) மதியம் 12 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்கு வந்து, துவிச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார்.

அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது, மூன்றே முக்கால் பவுண் சங்கிலியில் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்மணி சங்கிலியை இறுகப் பற்றியதால் அவரது கைகளிலும் அகப்பட்டது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில், குறித்த பெண்ணால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.