இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய குழாம் அறிவிப்பு

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரெய்க் பிராத்வெட் தலைமையிலான இந்த குழாமில் 15 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் பயிற்சி போட்டி இடம்பெறவுள்ளது.  இதனையடுத்து, முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25 ஆம் திகதி வரையிலும், இரண்டாவது போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.


ரெய்க் பிராத்வெய்ட் (தலைவர்), ஜெர்மென் பிளக்வுட் (உப தலைவர்), என்க்ருமா பொனர், ரோஸ்டன் சேஸ், ரஹீம் கொன்வோல், ஜசுவா டி சில்வா, ஷெனன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப்ஸ், கைல் மேயர்ஸ், வீராசாமி பெருமாள், கெமா ரோச், ஜேடன் சீல்ஸ், ஜேரம் செலொசானோ மற்றும் ஜொமெல் வொரிகன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.