
டோக்கியோவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 பேர் காயம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டில் பயன்படுத்தப்படும் சுரங்கவழியினுடனான தொடருந்தில் இந்தத் தாக்குல் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த தொடருந்திலிருந்து அதிகளவான மக்கள் ஓடிச் சென்று ஜன்னல்களினூடாக வெளியேறும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபரை ஜப்பான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 20 வயது மதிக்கத்தக்க ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.