இரத்தினபுரி மண் சரிவில் சிக்குண்ட 16 வயது சிறுமி சடலமாக மீட்பு! (படங்கள்)
இரத்தினபுரி - தும்பர -இஹலபொல பகுதியில் மண் சரிவில் சிக்குண்டு காணாமல் போன மூவரில் 16 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த மண் சரிவில் சிக்குண்டு காயமடைந்த அச்சிறுமியின் தாய் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


