கொழும்பு, தேசிய வைத்தியசாலை விடுத்துள்ள அறிவித்தல்!
நாட்டில் தற்போது கொவிட் பரவல் காரணமாக தொடர் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களை பயன்படுத்துமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதற்கு முன் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிகிச்சைகள் தொடர்பில் விசாரிப்பதற்காக வழங்கப்பட்ட தொலைப்பேசி இலக்கங்கள் மற்றும் வட்ஸ் அப் இலக்கங்களை பயன்படுத்தி தமது தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமாறு வைத்தியசாலையின் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
