சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்..என்னாச்சு?

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்..என்னாச்சு?

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இருதய பிரச்சினைகள் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முத்தையா முரளிதரன் நேற்று தன் 48 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்பொழுது இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பயிற்சியாளராக உள்ளார்.இதுமட்டுமில்லாமல் ஐபிஎல் லில் சென்னை மற்றும் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.

இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். நேற்றுதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.