எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது - ரோகித் சர்மா பெருமிதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

வெற்றிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

 

 

எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் அடித்திருந்த ரன்கள் சவாலானவை என்றே நினைக்கிறேன். 

 

பவர் பிளேயை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இரு அணிகளுமே முயற்சித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடு ஓவர்களில் நாங்கள் சற்று சிறப்பாக பேட் செய்தோம் என நான் நினைக்கிறேன். இதுபோன்ற மைதானங்களில் அனைத்து வீரர்களும் பல போட்டிகள் விளையாடியுள்ளனர். 

 

பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது ஃபீல்டிங் இன்றைய போட்டியில் அசத்தலாக இருந்தது. இன்றைய போட்டியில் நடந்த ரன் அவுட்கள் மற்றும் கேட்ச்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார்