த.தே.கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து சார்ள்ஸ் வெளியிட்டுள்ள தகவல்

த.தே.கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து சார்ள்ஸ் வெளியிட்டுள்ள தகவல்

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு கிடைப்பதாக வடமாகாண அளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் திணைக்களங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே கிடைக்கின்றது என்பதை குறிப்பிட முடியும்.

உண்மையில் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர்.

மக்களுக்கான செயற்திட்டங்களில் அவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

கிழக்கில் அவ்வாறான நிலை காணப்படவில்லயென்றும் அவர்தெரிவித்தார்.