வடகொரிய மக்களுக்கு அதிபர் கிம் எச்சரிக்கை!
கடினமான நெருக்கடிக்கு தயாராக வேண்டும் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.
நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மையை எதிர்கொள்கிறது என்ற மனித உரிமைகள் குழுக்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வடகொரிய தலைவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், 1990ஆம் ஆண்டுகளில் கொடிய பஞ்சத்துடன் நிலைமையை ஒப்பிட்டுப் பேசினார்.
எங்கள் மக்களை சிரமத்திலிருந்து விடுவிப்பதற்காக, இன்னும் ‘கடினமான மார்ச்’ ஒன்றை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
1990களில் பேரழிவுகரமான பஞ்சத்தின் போது நாட்டின் போராட்டத்தைக் குறிக்க வட கொரியா அதிகாரிகள் பயன்படுத்திய சொல் மார்ச் ஆகும்.
அந்தக் காலகட்டத்தில் சுமார் 3 மில்லியன் மக்கள் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது