இந்தோனேஷியாவில் வரலாறு காணாத வெள்ளம்! 100 இற்கும் மேற்பட்டவர்கள் பலி
இந்தோனேஷியா மற்றும் கிழக்குத் திமோரில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் மாத்திரம் 80 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், கிழக்கு திமோரில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன