முடக்கப்பட்ட கொழும்பின் ஒருபகுதி! மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முடக்கப்பட்ட கொழும்பின் ஒருபகுதி! மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு – ஜிந்துப்பிட்டி செல்லும் வீதி முழுமையாக முடக்கப்பட்டு 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் சுய தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையில் கொழும்பு - 13, ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது.