கிளிநொச்சியில் திடீரென வீசிய மினி சூறாவளி! தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரைகள்

கிளிநொச்சியில் திடீரென வீசிய மினி சூறாவளி! தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரைகள்

கிளிநொச்சியில் கனமழையுடன் வீசிய மினி சூறாவளியினால் ஐந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குறித்த இன்று மதியம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் இரண்டு தற்காலிக வீடுகள் முழுமையாகவும் மூன்று நிரந்தர வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.

சம்பவத்தை அடுத் கரைச்சி பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு குறித்த விடயம் தொடர்பில் அறவிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கையை பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது