பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (16) மேலும் 402 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 85,371 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது