மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

நாட்டில் மேலும் 140 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய இன்று இதுவரையில் 282 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றுறுதியான 2 ,708 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்