இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மேல், வடமேல், மத்திய மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது