
கொவிட் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்த நால்வரின் விபரங்கள்
நாட்டில் நேற்றைய தினம் 4 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.
இதன்படி கொவிட்-19 நோயினால் நாட்டில் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 8 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
கொவிட்-19 நியுமோனியா நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு -09 பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 8 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
கொவிட்-19 நியுமோனியா மற்றும் தீவிர நீரிழிவு நோய் நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது ஆண் ஒருவர் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
கொவிட்-19 நியூமோனியா மற்றும் தீவிரமாக குருதி நஞ்சானமை காரணமாக அவர் மரணித்துள்ளார்..
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட் நியுமோனியா மற்றும் குருதி நஞ்சானமையே அவரின் மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.