நீதிமன்ற உத்தரவிற்கமைய மன்னாரில் தற்காலிக அலங்கார வளைவு
நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்ப்பாண பிரதான வீதியில் இன்றைய தினம் தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி எதிர்வரும் 11ஆம் திகதி சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த வளைவு அமைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக சபையினர் மற்றும் தொண்டர்கள் இணைந்து அலங்கார வளைவை அமைத்ததுடன், சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நுழைவு பகுதியில் சிரமதான பணிகளையும் முன்னெடுத்தனர்.
இந்த முறை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்புடன் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வுகள் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது