முல்லைத்தீவு நாயாற்று கடற்கரையில் நீராட சென்று காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு நாயாற்று கடற்கரையில் நீராட சென்று காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு நாயாற்று கடற்கரையில் நீராட சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

4 பேருடன் கடலில் நீராட சென்றிருந்த அவர் இன்று முற்பகல் அலையில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில் காணாமல் போனவரை தேடும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்