மன்னாரில் ரயிலில் மோதி உயிரிழந்தவர் உட்பட வடக்கில் இன்றும் நால்வருக்கு கொரோனா

மன்னாரில் ரயிலில் மோதி உயிரிழந்தவர் உட்பட வடக்கில் இன்றும் நால்வருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னாரில் இன்று தொடருந்துடன் மோதி உயிரிழந்தவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னாரில் இன்று காலை தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது சடலத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட போது தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து பிசிஆர் பரிசோதனையும் செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட அக்கராயன்குளத்தில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்கு சென்று திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் " என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்