பதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது

பதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது

பதுளை பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவ்வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

அவ்வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த புற்றுநோய் சிகிச்சை பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன