உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 264,000 தடுப்பூசிகள்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு 264,000 தடுப்பூசிகள்

கொரோனா ஒழிப்பிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படவுள்ள 20%  தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 264,000 தடுப்பூசிகளை எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிலாபம் தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளின் படி இதுவரை உலகளாவிய ரீதியில் 280 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதோடு அதில் 75%மானவை 10 நாடுகளுக்கே வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 150 நாடுகளுக்கு எந்தவொரு தடுப்பூசியையும் வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.