கடந்த இரு மாதங்களில் 841 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் பதிவு

கடந்த இரு மாதங்களில் 841 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் பதிவு

வடமாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 841 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 563 பேருக்கும் பெப்ரவரி மாதம் 278 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 128 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 85 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 44 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 14 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இவர்களில், யாழ்ப்பாண சிறைச்சாலையின் 61 கைதிகளும் உள்ளடங்கியுள்ளனர்.

வடமாகாணத்தில் பெப்ரவரி மாதத்தில் 16 ஆயிரத்து 427 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 11 ஆயிரத்து 126 பரிசோதனைகளும்இ யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் 5 ஆயிரத்து 301 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இன்று வரை வடமாகாணத்தில் ஆயிரத்து 89 கொவிட்19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 349 பேர் யாழ்ப்பாண மாவட்டத்திலும் 376 பேர் வவுனியா மாவட்டத்திலும், 267 பேர் மன்னார் மாவட்டத்திலும், 78 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலும்இ 19 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் இதுவரை 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 3 மரணங்களும், வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தலா ஒவ்வொரு இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

அத்துடன் வட மாகாணத்தில் 8 ஆயிரத்து 636 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், தனியார்துறை மருத்துவப்பணியாளர்கள், மருத்துவபீட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்