
யாழில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய காணொளி! எட்டு மாத குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய் - பொலிஸாரின் அதிரடி
யாழ்ப்பாணம் மணியம்தோட்டப் பகுதியில் 8 மாத கைக் குழந்தையை பெண் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவளைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த காட்சி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று காலை சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு சென்று குறித்த பெண்ணை கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளையை தாயார் எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.