நாட்டில் நேற்றைய தினம் 5 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் 5 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 5 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளன.

கனேமுல்லை, பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில், கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர், பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம், கொவிட் 19 தொற்றுடன், சிறுநீரக தொகுதி புற்று நோய் என்பனவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - 10 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் அவர், பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்று மற்றும் மோசமடைந்த நீரிழிவு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புளத்கோஹூபிட்டிய பகுதியை சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நியுமோனியாவாகும்.

அத்துடன் கண்டியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவருக்கு பேராதனை போதனா வைத்தியசாலையில், கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் அவர், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூஜாப்பிட்டி பகுதியை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவருக்கு கண்டி தேசிய வைத்தியசாலையில், கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தார்.

கொவிட் 19 நியுமோனியா மற்றும் இதயம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.