மோட்டார்சைக்கிளுடன் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதியதில் கடற்படை வீரர் ஸ்தலத்திலேயே பலி

மோட்டார்சைக்கிளுடன் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதியதில் கடற்படை வீரர் ஸ்தலத்திலேயே பலி

திருகோணமலை, தம்பலகாமம், 99ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்படை வீரர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் கடற்படை வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

இதனையடுத்து சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சம்பூர் கடற்படை முகாமில் பணிபுரியும் விக்கிரம திலக (வயது 31) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இது தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.