சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனா

சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனா

சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

சிறைச்சாலையில் உள்ள 8 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியானதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சிறைச்சாலை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,855 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில், 4,663 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது