ஏப்ரல் 21 தாக்குதல்: விசாரணை அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - விவாதத்தைக் கோரியது எதிர்க்கட்சி
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல மூன்று நாள் விவாதத்திற்கு கோாிக்கை விடுத்தார்