தலவாக்கலை-ஸ்கல்பா தோட்டத்தில் 9 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

தலவாக்கலை-ஸ்கல்பா தோட்டத்தில் 9 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் - ஸ்கல்பா தோட்டத்தில் 9 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இருப்பதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

7 பெண் தொழிலாளர்களும், 2 ஆண் தொழிலாளர்களும் இன்று தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த வேளை, குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.

அவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது