குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு! மூன்று வயது மகளுடன் விபரீத முடிவெடுத்த இளம்தாய்

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு! மூன்று வயது மகளுடன் விபரீத முடிவெடுத்த இளம்தாய்

பிபில- பதுள்ளகம்மன பகுதியைச் சேர்ந்த தாயொருவர், தனது 3 வயது மகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குடும்ப பிரச்சினை காரணமாவே அவரது மகளுடன் 24 வயதுடைய தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டுக்கு அண்மையிலிருந்த 40 அடி ஆழமான கிணற்றில், தாய் மற்றும் மகளின் சடலங்கள் இருப்பதை கண்ட உறவினர்கள், பிபில பொலிஸாருக்கு இன்று தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கும் இராணுவத்தில் பணி புரியும் அவரது கணவருக்குமிடையில் தொலைபேசியின் மூலம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின் குறித்த பெண் மற்றும் குழந்தையை காணவில்லையென அந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த பெண், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கிணற்றில் இருந்த இருவரினது சடலங்களும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாலையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

சேட்டிபாலையம் விளையாட்டு மைதான வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.