நாட்டில் மேலும் 10 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 10 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் இன்றைய (21) தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 10 மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் கொலொன்னாவை, வெள்ளவத்தை, களுத்துறை, வஸ்கடுவ, பிபலை, குருதலாவ, பிடகோட்டே, குடாகல்கமுவ, இரத்மலானை மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் இக்கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன