
கொரோனாவால் மேலும் இருவர் பலி!
கொரோனாவினால் இன்று (20) இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான ஆண் ஆவார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (19) அவர் உயிரிழந்துள்ளார்.
சுவாச தொகுதி செயலிழந்தமை, குருதி விசமானமை, கொவிட் நியுமோனியா மற்றும் புற்றுநோய் போன்ற நோய் நிலைமைகள் இவரது மரணத்துக்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மற்றைய நபர் திஹாரியவைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவராவார்.
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதன் பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (20) அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட் நியுமோனியா இவரது மரணத்துக்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.