உள்ளாடைக்குள் ஹெரோயின் வைத்திருந்த 'மொரட்டுவ பம்பா' கைது!

உள்ளாடைக்குள் ஹெரோயின் வைத்திருந்த 'மொரட்டுவ பம்பா' கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் மொரட்டுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுள் மொரட்டு பம்பா என்ற பெயரில் அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியுள்ள நபர் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்குலான காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய, அங்குலான – மோதரவத்த விதியில் பயணித்த உந்துருளி ஒன்றை சோதனையிட்டபோது, 20 கிராம் ஹெரோயினுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பின்னர் அச்சந்தேகநபரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, அவ்வீதியில் பயணித்த காரொன்று காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதன்போது, மொரட்டுவ பம்பா என்ற 40 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட அதேவேளை, அவரது உள்ளாடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 320 கிராம் போதைப்பொருளையும் கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்