இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்

இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் 75 மில்லி மீற்றர் அளவான மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஊவா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.