
சஹரானிடம் பயிற்சிபெற்ற 24 வயதான யுவதி கைது
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சஹரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 6 பெண்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் தற்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.