நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 3 கொவிட்19 மரணங்கள் நேற்று பதிவாகின

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளன.

மாத்தளை பகுதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவருக்கு மாத்தளை பொது வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கலகெடிஹேன பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவருக்கு வத்துப்பிட்டி வைத்தியசாலையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின்னர், அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா மற்றும் பக்றீறியா தொற்று நிலை என்பனவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.

அதன் பின்னர் அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நியுமோனியா, சிறுநீரக பாதிப்பு, உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது