ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் வென்னப்புவ பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 15 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்