அமுல்படுத்தப்படவுள்ள நீர் வெட்டு! கொழும்பு வாழ் மக்களுக்குக்கான முக்கிய அறிவித்தல்

அமுல்படுத்தப்படவுள்ள நீர் வெட்டு! கொழும்பு வாழ் மக்களுக்குக்கான முக்கிய அறிவித்தல்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியாவ மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலும் இரத்மலானை பகுதியிலும் நாளைய தினம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.