கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!!
பதவிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உந்துருளியில் பயணிக்கும் போதே கைது செய்யப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 26 வயதான ஸ்ரீ-திஸ்ஸபுர பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.