நாடு திரும்பிய இலங்கையர்கள்..!

நாடு திரும்பிய இலங்கையர்கள்..!

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 1087 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளில் இருந்து 22 விமானங்கள் நாட்டுக்குள் வந்ததாகவும்,அந்த விமானங்கள் மூலமே இவர்கள் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்படுகின்றது.