
கடல் நடவடிக்கையில் ஈடுப்படுவோருக்கு எச்சரிக்கை
இலங்கையின் தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசத்தில் வானில் மேகமூட்டத்தின் செயற்பாட்டின் காரணமாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மட்டக்களப்பில் இருந்து காலி மற்றும் அம்பாந்தோட்டை வரையில் இந்த சீரற்ற காலைநிலை காணப்படும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக கன மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடன் கடல் கொந்தளிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடற் நடவடிக்கையில் ஈடுப்படுவோர், கடல் தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது