
நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
நாட்டில் மேலும் 7 கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட்-19 காரணமாக 18 மாதங்களான குழந்தை ஒன்றின் மரணமும் இந்த பட்டியலில் அடங்குகின்றது.
கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை ஒன்று கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று முன்தினம் மரணித்தது.
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த குழந்தை மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் நியூமோனியா காரணமாக குழுந்தை மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேரள வெலிகம பகுதியை சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி மரணித்தார்.
கொவிட் நியூமோனியாவுடன் மூளையில் ஏற்பட்ட குருதிப்பெருக்கு நிலைமையே மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் கடந்த 31 ஆம் திகதி மரணித்தார்.
கொவிட்-19 நியூமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் பக்கவாத நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வத்தேகம பகுதியை 73 வயதுடைய பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 31 ஆம் திகதி மரணித்தார்.
கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்றுறுதியானமையை அடுத்து தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.
கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் மோசமடைந்த நீரிழிவு நிலைமை காரணமாக அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் தொற்றுறுதியான நிலையில் கடந்த முதலாம் திகதி மரணித்தார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை தொற்றுறுதியானமையை அடுத்து அவர் பிம்புர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.
கொவிட் நிலையில், குருதியின் அளவு குறைதல், நீரிழிவு மற்றும் இதய நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கெலிஓயா பகுதியை சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் தொற்றுறுதியான நிலையில் கடந்த முதலாம் திகதி மரணித்தார்
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதியான நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமடைந்ததார்.
கொவிட்-19 தொற்றுறுடன் குருதி நஞ்சாதலால் ஏற்பட்ட பல உறுப்புக்கள் செயலிழந்தமை, கொவிட் நியூமோனியாவால் குருதி நஞ்சாதல், மோசமடைந்ந நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
றாகம பகுதியை சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.
றாகம பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்தார்.
தீவிர கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் மூச்சிழப்பு நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.