களனி ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு...!

களனி ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு...!

களனி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு இளைஞர்களும் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.

மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

குறித்த இளைஞர்கள் தம்புள்ளை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் நவகமுவ பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

21 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்