சீனப் பெட்டிகளுடனான தொடருந்துகளை செலுத்துவதிலிருந்து விலகுவதற்கு தொடருந்து சாரதிகள் தீர்மானம்...!

சீனப் பெட்டிகளுடனான தொடருந்துகளை செலுத்துவதிலிருந்து விலகுவதற்கு தொடருந்து சாரதிகள் தீர்மானம்...!

இன்று முதல் சீனப் பெட்டிகளுடன் கூடிய தொடருந்துகளை செலுத்துவதில் இருந்து விலகுவதற்கு தொடருந்து சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு 100 சீனப் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் பல சந்தர்ப்பங்களில் அவற்றின் தடுப்பு கட்டமைப்பில் காணப்பட்ட கோளாறு காரணமாக போக்குவரத்து நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் நாளாந்தம் 50 முதல் 60 சீன தொடருந்து பெட்டிகள் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இது சிக்கலான செயற்பாடு என்பதால் சீன பெட்டிகளுடன் கூடிய தொடருந்துகளை செலுத்துவதில் இருந்து விலகுவதற்கு தீரமானித்துள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்தார்.

தடுப்பு கட்டமைப்பு செயற்படாமல் கடந்த 25 ஆம் திகதி களனி பகுதியில் தொடருந்து ஒன்று நிற்காமல் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்